
கோலாலம்பூர் –
மலேசியாவின் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் தேசிய இரத்த மையத்துடன் (பி.டி.என்) இணைந்து இந்த ஆண்டு தனது இரண்டாவது இரத்த தான இயக்கத்தை நாடு முழுவதும் 15 இடங்களில் ஏற்பாடு செய்யவுள்ளது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் மூன்று நாள் இயக்கி நடத்தப்படும் என்று எஸ்.ஜே.எம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சபா போன்ற மாநிலங்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன, மேலும் நிபந்தனை இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (சிஎம்சிஓ) மாநிலம் தழுவிய அளவில் செயல்படுத்தப்படுவதால் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்று அது கூறியது.
செயிண்ட் ஜான் தலைவர் டத்தோ லாய் சீ மிங் அந்த அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு இரத்த வங்கிகளுக்கு உதவுவதற்காக முடிந்தவரை பல இரத்த தான திட்டங்களை அவர்கள் தொடர்ந்து ஏற்பாடு செய்வார்கள் என்று கூறினார்.
பொதுமக்களின் பாதுகாப்பு , நல்வாழ்வை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிலையான இயக்க நடைமுறைகளும் (எஸ்ஓபி) கடைபிடிக்கப்படும் என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்தார்.
வந்தவுடன், நன்கொடையாளர்களுக்கு கை சுத்திகரிப்பு மருந்து வழங்கப்படும். அவர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நன்கொடையாளரும் வெளியேறியபின் படுக்கைகள், உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரத்த தானம் செய்பவர்கள் பி.டி.என் சமூக ஊடக தளங்களையும், எஸ்.ஜே.எம் வலைத்தளத்தையும் http://sjam.org.my/blooddonation/ பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்