தஞ்ஞோங் மாலிம், ஆகஸ்ட் வங்கி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் மூன்று ATM இயந்திரத்தை வெடிகுண்டு வைத்து உடைத்த சம்பவத்தில் 300,000 ரிங்கிட் ரொக்கம் திருடப்பட்டது. இச்சம்பவம் இன்று அதிகாலை தஞ்ஞோங் மாலிமில் Jalan Haji Mustaffa Raja Kamala, Muallim இனும் இடத்தில் நிகழ்ந்துள்ளது.
கொள்ளையர்கள் பயன்படுத்திய வெடிகுண்டில் வங்கியின் கண்ணடி பகுதிகள் முழுமையாக சேதமுற்றன. உடைந்த கண்ணாடி துண்டுகளால் அந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன் காயமுற்றிருக்கலாம் என அங்கு சிதறிக் கிடந்த இரத்தத்தை காணும்போது யூகிக்கப்படுகிறது என கூறப்பட்டது.
இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், வெடிகுண்டு சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வங்கி கண்ணாடிகள் உடைந்திருந்ததாகவும்,சிலர் வங்கிப் பணங்களை எடுத்துக் கொண்டு சிவப்பு நிற வண்டியில் கிளம்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.