கோலாலம்பூர்
4,360 ரிங்கிட்டுக்கும் குறைவான மாதச் சம்பளம் பெறுவோர், மத்திய வங்கியின்(பேங்க் நெகாரா) உதவியோடு சொந்த வீடுகளை வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டது.
மேற்கண்ட சம்பளம் பெறுவோர் 300,000க்கும் குறைவான விலையில் வீடுகளை வாங்க பேங்க் நெகாரா 100 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளாக அதன் கவர்னர் நோர் சம்சியா முகமட் யூனுஸ் தெரிவித்தார்.
அதிகமான மக்கள் சொந்த வீடுகளைப் பெற நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு, குடும்பத்தின் மாத வருமானம் 2,300 லிருந்து 4.260 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், வீட்டின் விலை 150,000 லிருந்து 300,000 ஆக உயர்த்தப்பட்டது.