சிப்பாங்
ஆகஸ்டு 21, புதன்கிழமை இரவில் இருந்து கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரு முனையங்களின் கணினி இணைப்புகளில் பழுது ஏற்பட்டு பயணிகளுக்கான சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது.
அது தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும் பணியாளர்கள் 24 மணி நேரமும் சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
இணையத் தொடர்பின் துண்டிப்பினால், வைஃபி தொடர்பு, விமானப் பயண அறிவிப்புகள், பயணிகள் பதிவு செய்யும் முகப்புகள், பயணப் பை கையாளும் சாதனங்கள் செயல்படாமல், அனைத்தும் பணியாளர்களே கையாளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, தாமதத்தைத் தவிர்க்க, பயணம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னரே பதிவு செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக்