தலை, கைகால்கள் துண்டிக்கப்பட்ட அழுகிய சடலம்: மீட்பு!

கோத்தா கினபாலு

தலை, கை கால்கள் துண்டிக்கப்பட்ட ஆடவரின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  காலை 8  மணியளவில் பூலாவ் மெங்காலும் கடற்கரையில் கண்டெடுக்கப் பட்டதாக  கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் துணை ஆணையர் ஹபீபீ மஞ்ஜிஜி தெரிவித்தார்.

அது பற்றி  அங்குள்ள எண்ணெய் நிறுவன  உதவி போலீசார் தகவல் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆடவர்  மஞ்சள் நிற சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக அச்சடலம்  மருத்துவனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

அது பற்றித் தகவல் தெரிந்தோர் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here