இந்தோனேசியா
2022ஆம் பிஃபா உலக கிண்ணம்
மற்றும் 2023ஆம் ஆண்டு ஏ.ப்.சி. ஆசிய கிண்ணம் ஆகிய போட்டிகளின் தகுதிச் சுற்று ஆட்டத்தில்
மலேசியா இன்று இந்தோனேசியாவுடன் மோதுகிறது. ஜி-குழுவின் இரண்டாவது ஆட்டமாக இது விளக்குவதால்
காற்பந்தாட்ட இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்த ஆட்டத்தைப் பார்க்க இன்று
இந்தோனேசியாவின் கெளோரா புங்கார்னோ அரங்கத்தில் சுமார் ஒரு இலட்சம் இரசிகர்கள் கூடுவார்கள்
என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முழுகவனத்தோடு விளையாடி வெற்றிப் பெறுவோம்
என்று தேசிய அணியின் கேப்டனான ஃபரிசால் மார்லியாஸ் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.