கோலாலம்பூர், மார்ச் 17-
போலித்தனமான செய்திகளைப் பரப்பிவரும் கும்பல்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்க போலீசார் கழுக்குப் பார்வையில் இருக்கின்றனர் என்பதை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் குறிப்பிட்டிருக்கிறார்.
மூடப்படும் நிலையில் மலேசியா இருக்கிறது என்பதில் உண்மை இல்லை. உண்மை அல்லாத செய்திகளைப் பரப்புவதால் மக்களின் அச்ச உணர்வு அதிகமாகி குழப்பம் ஏற்படுகிறது.
குழப்பம் விளைவிக்கும் தனியார்கள் கண்காணிக் கப்படுகின்றனர்.
இச்செய்திகளைபகிர்வதால் ஏற்படும் விளைவுகளை அறிந்துகொள்ளாதவர்கள் அபாயகரமானவர்கள். பாதிப்பு அதிகமாகிவிடுவதை அவர்கள் உணராமல் செய்திகளைப் பரப்பிவருகின்றனர் என்றார் அவர்.