குப்பைப் பைகளும் குமட்டும் நாற்றமும்

கோலாலம்பூர் , மார்ச் 21-

கொரோனா 19 என்றால் குப்பை லாரிகள் செயல்படாமல்  இருக்க முடியாது. குப்பைகள் வெளியேற்றப் படவேண்டும் என்பது கட்டாயம்.

குப்பைகள் சேகரிக்கின்றவர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி. குப்பைகள் சேகரிக்கின்றவர்கள் வீடுவீடாக வருகின்றனர்.

குப்பைகளை லாரிகளில் ஏற்றுகின்றனர். கொடுமையான குப்பைகளையும் குமட்டும் நாற்றத்தையும் சேகரிக்கும் இவர்கள் நடமாடும் தெய்வங்கல் என்றால் மிகை இல்லை.

இவர்கள் எக்காரணம் கொண்டும் கொரோனா 19 பாதிப்பில் வீழ்ந்துவிடக்கூடாது.

இவர்கள் இல்லாவிட்டால் குப்பைகள் அகற்றப் படமுடியாமல் போய்விடும்.
அவர்களின் இடத்தை உள்ளூர் மக்கள் தயாராக இல்லை.

ஆனால் அவர்களின் சுகாதாரம் பாதுகாப்பாகம் இருக்கிறதா என்பதுதான் பிரச்சனை.
வாழும் காலத்திலேயே இவர்கள் நரகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.

குப்பை சேகரிக்கும் குத்தைகையாளர்கள் மகான்களாக இருக்கவேண்டாம். நல்ல குடிமகன்ளாக யோசிக்க வேண்டாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here