பெட்டாலிங் ஜெயா:
வியாழக்கிழமை (மார்ச் 26) வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில், 32 பேர் கொண்ட அமைச்சரவை மற்றும் 38 துணை அமைச்சர்கள் தங்கள் ஊதியத்தை தானாகக் குறைத்து நிதிக்கு அனுப்புவார்கள் என்றும் கூறியுள்ளது.
மார்ச் 25 ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் சம்பளத்தின் இரண்டு மாதங்கள் கழிக்கப்பட்டு கோவிட் -19 நிதிக்கு அனுப்பப்படும் என்பதனை ஒப்புக் கொண்டனர்.
இந்த நடவடிக்கை கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கத்தின் ஆர்வத்தை காட்டுகிறது.
“தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான அரசாங்க முயற்சியாக கோவிட் -19 நிதி மார்ச் 11 அன்று தொடங்கப்பட்டது.
நேற்று (மார்ச் 25) நிலவரப்படி, அரசாங்க மானியங்கள் உட்பட சேகரிக்கப்பட்ட மொத்த பங்களிப்பு வெ.8,493,103.48 ஆக உள்ளது என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பெரிகாடன் நேஷனலின் கீழ் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினின் அமைச்சரவை மார்ச் 10 அன்று நியமிக்கப்பட்டது.