Sanitizer எனும் கை சுத்திகரிப்பான் விலை அதிகமாக இருப்பதாகவும் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. நோய்த்தொற்றுக் கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள படிகார நீரையும் பயன்படுத்தலாம். இதனை ஏழைகளின் sanitizer என்றுகூடச் சொல்லலாம்.
படிகார நீர் செய்யும் முறை:
படிகாரக் கல் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதனை 10 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பின்னர் 50 கிராம் கல் உப்பு போட்டு நன்கு கலக்கவும். படிகார நீர் தயார்.
பயன்படுத்தும் முறை:
கை ,முகம் தண்ணீரில் நன்கு கழுவிய பின் படிகாரம் நீரை சிறிதளவு கையில் எடுத்து கைகள் மற்றும் முகத்தில் முழுவதும் தடவிவிடவும். இது sanitizer ன் பாதுகாப்பான சுத்திகரிப்புப் பணியைச் செய்துவிடும். கை, முகத்தில் நோய்த் தொற்றுக் கிருமிகள் இருப்பின் அவற்றைப் படிகார நீர் செயலற்றுப் போகச் செய்துவிடும். பாதுகாப்பை அதிகரிக்கும். மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டு எளிமையான இந்த sanitizer ஐப் பயன்படுத்தலாமே.