கோலாலம்பூர் , மார்ச் 28-
நாட்டின் நிலைமை அரசியலைக்கடந்து நிற்கிறது. மக்கலாகம் இருக்கட்ம் அரசியலாக இருக்கட்டும், ஒரே சிந்தனை கொரொனாவை எதிர்த்து நிற்பதுதான்.
பதவி அரசியல் பேசுவதற்கு இது சரியான நேரமல்ல என்று கூறுகிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். பக்காத்தான் தலைமையின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது.
இக்கட்டான இந்நேரத்தில் சிலரைக் களையெடுக்கும் செயல்களும் இடம்பெறுகின்றன. இந்நேரத்தில் இது தேவையற்றது என்று பக்காத்தான் தலைமை அறிவுறுத்துகிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடப் போராடும் இந்நேரத்தில் மாரா, எம்பிபி ஆகிய கூட்டரசு பிரதேச அமைப்புகளிலிருந்து பலரை பதவி நீக்கம் செய்திருப்பதை பக்காத்தான் தலைமைத்துவ மன்றம் சாடியது.
அரசியல் பேசுவதற்கு இது நேரமல்ல என்பது ஒருபுறம் நியாமான சிந்தனை என்றாலும் ரணத்திற்குச் சிகிச்சை என்பது அவசியம் என்றும் பேசப்படுக்கிறது.
அரசியல் நடத்துவது, பேசுவது வேறு என்றாலும் அரசியல் இல்லாமல் திட்டங்களுக்கு உயிர் கொடுக்க முடியாது.
இதற்கு ஒத்துழையாமை என்றால் கலையெடுப்புதான் சரியான வைத்தியம். இதைத்தான் பிரதமர் கச்சிதமாக செய்துவருக்கிறார் என்பவர்களிம் அரசியலில் இருக்கிறார்கள்.