சென்னை –
தமிழ் நாட்டிலும் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்தது.
பத்து மாத சிசு உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஈரோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு தாய்லாந்து நாட்டினரிடம் இருந்து கொரோனா பரவியது.