சென்னை:
கொரேனா பாதிப்புள்ள மாநிலங்களில் இந்தியாவில் தமிழகம் 3வது இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 127 ஆக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் 3வது இடம்.
முதலிடத்தில் கேரளாவும் (234 பேர்), 2வது இடத்தில் மஹாராஷ்டிராவும் (216 பேர்) உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 124 பேர் குணமாக, 35 பேர் பலியாயினர். 1,238 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.