கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சம் பேர்

மகிழ்ச்சியில் மருத்துவ ஊழியர்

ஜெனிவா,ஏப்ரல் 08-

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் (202 நாடுகள்) இந்த வைரஸ் வேகமாக பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், மருத்துவத்துறையினரின் தீவிர சிகிச்சை மற்றும் தன்னலமற்ற சேவைகளால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் 14 லட்சம் பேருக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 348 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இதுவரை 3 லட்சத்து 759 பேர் சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரசிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில்
அதிக எண்ணிக்கையை கொண்ட நாடுகள் சில வருமாறு:-

அமெரிக்கா – 21,316

ஸ்பெயின் – 43,208

இத்தாலி – 24,392

பிரான்ஸ் – 19,337

ஜெர்மனி – 36,081

சீனா – 77,167

ஈரான் – 27,039

துருக்கி -1,582

சுவிஸ்சர்லாந்து – 8,704

பெல்ஜியம் – 4,157

கனடா – 3,922

ஆஸ்திரியா – 4,046

தென்கொரியா – 6,694

ஆஸ்திரேலியா – 2,547

டென்மார்க் – 1,491

மலேசியா – 1,321

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here