வாஷிங்டன்,
கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் மற்றவர்களை விட, கர்ப்பிணி பெண்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுவதில்லை என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 43 கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் இதழில் வெளியாகியுள்ளது.
மார்ச் 13 முதல் 27 வரை இரு வாரங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 80 சதவீதம் பேருக்கு அதாவது 37 கர்ப்பிணி பெண்களுக்கு லேசான தொற்றும் 15 சதவீதம் பேருக்கு தீவிரமான கொரோனா தொற்றும் 5 சதவீதம் அதாவது 2 பெண்களுக்கு மோசமான தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரொனா தொற்று உறுதியான 29 கர்ப்பிணிப் பெண்களில் சாதாரண அறிகுறியுடன் உள்ள 25 பேர் வீட்டுக்கு அனுப்பப்படும் அளவுக்கு இருப்பதாகவும் அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ சிகிச்சை உதவியோ தேவையில்லை. ஆண்டிபார்டம் பெண்கள் யாரும் சேரவில்லை என்பதால் ஆக்ஸிஜன் கூடுதலாக தேவையில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் உறுதியாகியுள்ளது.