கோத்தா பாரு சாலை மூடப்படவில்லை

பெட்டாலிங் ஜெயா, ஏப்.9-

கோத்தாபாரு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்படும் என்று ஓர் அறிக்கையை வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுவது பொய்ய்யான செய்தி என்று கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ அஹ்மட் யாகோப் மறுத்துள்ளார்.
அத்தகைய அறிக்கையை யாரும் வெளியிடவில்லை என்றார் அவர்..

கோட்டா பாரு செல்லும் பெரும்பாலான சாலைகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மூடப்படும் என்பது உண்மையல்ல என்று அஹ்மட் கூறினார்.

போலி செய்திகளைப் பரப்புவதையும் பகிர்வதையும் நிறுத்திக்கொள்ளுமாறு அவர் இத்தரப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மக்களுக்கு இது தேவையற்ற குழப்பத்தை மட்டுமே உருவாக்கும். மக்கள் தேவையற்ற முறையில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. இது வீணான குழப்பத்தையும் சிக்கலையும் ஏற்படுத்திவிடும். என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here