சிரம்பான், ஏப்.15-
நெகிரி செம்பிலானில் உள்ள பண்டார் பாரு செண்டயானில் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுள்ளது.
இங்குள்ள சமயப் பள்ளி ஒன்றில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார். ஜெரண்டூட், பெனாந்தி, சுங்கை லூய், ஜாசின் ஆகிய இடங்களைப் போல இங்கும் கொரோனா தொற்றுக் குழுமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டு சிவப்பு கண்காணிப்பு வளையத்திற்குள் செண்டயான் வைக்கப்பட்டுள்ளது.