தடையை மீறிய ஆடவருக்கு இரண்டு வாரம் சிறை

கோல திரங்கானு, ஏப்.16-

நடமாட்டத் தடையை மீறிய ஆடவர் ஒருவருக்கு கோலதிரங்கானு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 500 வெள்ளி அபராதத்துடன் இரண்டு வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கோல நெருஸ், புக்கிட் துங்கால் பகுதியில் தகுந்த காரணமின்றி அவர் சுற்றித் திரிந்ததற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அப்துல் ரபிஸ் பின் அப்துல் ரஹிம்(26) எனப் பெயர் கொண்ட ஆடவர் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிபதி நோர்மஸ்ரினி மாமூட் தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here