பெட்டாலிங் ஜெயா , ஏப்.17-
மங்கோலியப் பெண்கள் இருவரை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்பில் மங்கோலியப் பெண்களை தடுத்து வைத்தது ஏன் என்பதை விளக்குமாறு ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) பெண்கள் பிரிவு காவல்துறையினரை வலியுறுத்துகிறது என்பதை செய்தியாக வெளியிடப்பட்டிருக்கிறது.
மூன்று பெண்களும் இடைக்கால பாதுகாப்பு உத்தரவின் கீழ் (ஐபிஓ) தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது.
மனித கடத்தல் தொடர்பாக, பெண்களை விசாரிப்பதற்கான காரணங்களை காவல்துறை விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளனர் என்று பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினாரான கஸ்தூரி பட்டு சுட்டிக்காட்டினார்.