ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14,378 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,378 ஆக உயர்வு

புதுடெல்லி,ஏப்ரல் 18-

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் 13,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,076 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 452 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 480 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,991 பேர் குணமடைந்து உள்ளனர். 11,906 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,378 ஆக உயர்வடைந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here