மலாக்கா நீரணையில் கப்பல் போக்குவரத்து வீழ்ச்சி

ஜோகூர் பாரு: மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்.எம்.இ.ஏ) மலாக்கா ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தில் சுமார் 45% வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவு (எம்.சி.ஓ) விதிக்கப்படுவதற்கு முன்பு ஒரு பிசியான பாதையாக இருந்தது.

மார்ச் 18 ஆம் தேதி எம்.சி.ஓ தொடங்குவதற்கு முன்பு தினசரி 200 முதல் 300 கப்பல்கள் நீரிணையை கடந்து செல்லும் என்று மாநில சுகாதார சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர். வித்யானந்தன் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டக்கட்டுப்பாட்டு ஆணை தொடங்கியதிலிருந்து மாநில நீர்நிலையை கட்டுப்படுத்தவும் ரோந்து செல்லவும் 145 அதிகாரிகள், பணியாளர்களை எம்.எம்.இ.ஏ நிறுத்தியுள்ளது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வீட்டிற்குச் செல்ல அறிவுறுத்தப்படுவதையும் எம்.எம்.இ.ஏ உறுதி செய்துள்ளது, அதே நேரத்தில் ஏ மற்றும் பி வகை மீனவர் படகுகள் இக்காலக்கட்டதின்போது தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்படுகின்றன.

மார்ச் 27 முதல் ஏப்ரல் 12 வரை தீயணைப்பு மீட்புத்துறை மாநிலம் முழுவதும் 632 இடங்களில் பொதுத் துப்புரவுப் பயிற்சியை நடத்தியுள்ளதாகவும் வித்யானந்தன் தெரிவித்தார்.

ஜொகூர் பாரு, முவார், பத்து பஹாட் பகுதிகளை உள்ளடக்கி தினமும் நள்ளிரவு 9 மணி வரை இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here