கோலாலம்பூர் –
தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் உள்ள மெனாரா ஒன் சிட்டி வளாகத்தில் நேற்று சுகாதார துறையைச் சேர்ந்த பணியாளர்கள் கிருமிநாசினியையும் கொசுமருந்தையும் தெளித்தனர்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் மெனாரா ஒன் சிட்டி குடியிருப்பில் பலருக்கு கோவிட் -19 கிருமி தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து இங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது.
பின்னர் மலாயன் மேன்சன் – சிலாங்கூர் மேன்சனிலும் கிருமி தொற்றுநோய் பரவியதால் அங்கும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெனாரா ஒன் சிட்டியில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு கருதி நேற்று அந்த வளாகம் முழுவதும் மருந்து தெளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.