பெட்டாலிங் ஜெயா: மூன்று சந்தேக நபர்களைக் கைதுசெய்ததோடு 9 கிலோவுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்ததன் மூலம் போதைப்பொருள் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
உளவுத்துறையைத் தொடர்ந்து, மாலை 3.20 மணியளவில் ஜாலான் தங்காங்கில் ஒரு கூரியர் நிறுவனத்தை போலீசார் சோதனை செய்தனர் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்டத் தலைவர் ஏசிபி எசானி முகமட் பைசல் தெரிவித்தார்.
எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நாங்கள் 27 வயதான வேலையற்ற நபரை கைது செய்து, சுங்கை வேயில் உள்ள அவரது டொயோட்டா காரை கைப்பற்றினோம்.
நாங்கள் அவரது காரை சோதனை செய்தபோது காரின் ஒலிபெருக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களைக் கண்டுப்பிடித்தோம் என்று அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த சோதனையில் போதைப்பொருள் என்று நம்பப்படும் 440 போதை மாத்திரைகள், 500 எரிமின் 5 மாத்திரைகள், 300 கிராம் கெத்தமன் மற்றும் 7.14 கிலோ தூள் பொருள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
“சுமார் ஒரு மணி நேரம் கழித்து, புக்கிட் ஜாலில் நடந்த சோதனையின்போது 24 வயது வெளிநாட்டு பெண்ணை கைது செய்தோம். நாங்கள் 300 கிராம் சியாபு மற்றும் வெ.320,000 ரொக்கம், வெளிநாட்டு நாணயம், 48 கிராம் எடையுள்ள மூன்று தங்கக் கம்பிகள் மற்றும் சில நகைகளையும் பறிமுதல் செய்தோம் என்று அவர் மேலும் கூறினார், பின்னர் அவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தமன் கிள்ளான் உத்தாமாவில் மற்றொரு சோதனை நடத்திமற்றும் மற்றொரு ஆண் சந்தேக நபரை கைது செய்திருக்கிறோம்.
சந்தேக நபர்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்படும் ஒரு குண்டர் கும்பலில் பகுதியாக இருந்திருக்கின்றனர். அவர்கள் கூரியர் நிறுவனத்தைப் பயன்படுத்தி போர்னியோ உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள பயனர்களுக்கு தங்கள் மருந்து விநியோகத்தை அனுப்பியிருக்கின்றனர் என்று அவர் கூறினார்.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (எம்.சி.ஓ) மீறியதற்காக சோதனைக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் சந்தேக நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்ததாக ஏ.சி.பி நிக் எசானி தெரிவித்தார்.
அவர் அதே காரை மாற்றியமைக்கப்பட்ட ஆடியோ சிஸ்டத்துடன் மருந்துகள் மறைத்து வைத்திருந்தார், ஆனால் அப்பொழுது எங்களால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் இறுதியில் அவரைப் பிடித்தோம். மேலும் சந்தேக நபர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக உதவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.