கூலிம்,ஏப்.25-
அதிகாலையில் நேர்ந்த தீச்சம்பவத்தில் பூக்கடை ஒன்றும் ஆடைகள் விற்பனைக் கடை ஒன்றும் அழிந்தன.
ஜாலான் ராயா கூலிமில் நேர்ந்த தீயை கூலிம் பண்டார் பாரு தீயணைப்பு மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
75 விழுக்காடு வரையில் இரண்டு கடைகளும் சேதமுற்றதாக கெடா மாநில மீட்புப் படைத் தலைவர் முகமட் எசான் முகமட் சைட் தெரிவித்தார்.