கோலாலம்பூர், மே 1-
வரும் திங்கட்கிழமை முதல் உணவகங்கள் வழக்கம் போல செயல்படலாம் என பிரதமர் டான்ஸ்ரீ முகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்பதால் உணவகங்கள் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உணவகங்களுக்குச் செல்லும் பொது மக்களும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியில் மேசைகள் அடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
உணவுகள் பரிமாறப்படும்போது போதுமான இடைவெளி இருப்பதை உணவகங்கள் நிலைநிறுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.