இன்றைய நிலவரப்படி கோவிட் 19 நோய் தொற்றுக்கு 31 பேர் இலக்காகியுள்ள வேளையில் 60 பேர் குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
இன்று பதிவாகி இருக்கும் 31 பாதிப்புகளில் 10 பேர் வெளிநாட்டவர்களாவர். 10 வெளிநாட்டிலிருந்து ஏற்பட்ட தொற்றாகும். 11 மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ள்னர்.
மலேசியாவில் மொத்த நோய் தொற்று 7,009ஆக உயர்ந்திருக்கும் வேளையில் 1,189 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இன்று இறப்புகள் பதிவாகத நிலையில் மொத்த இறப்பின் எண்ணிக்கை 114ஆக இருக்கிறது.