லிவர்பூல்: கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இரண்டு மாத நிறுத்தத்திற்குப் பிறகு இங்கிலாந்தின் பிரீமியர் லீக் மீண்டும் தொடங்க இது சரியான நேரம் என்று லிவர்பூல் மேலாளர் ஜூர்கன் க்ளோப் நம்புகிறார்.
மார்ச்சிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பிரீமியர் லீக், ஜூன் மாதத்தில் அதன் பருவத்தை மீண்டும் தொடங்கவுள்ளது.
பிரீமியர் லீக் கிளப்புகளுக்கு சிறிய குழுக்களாக பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முதல் படியாகும் என்று க்ளோப் கூறினார்.
லிவர்பூல் இந்த வாரம் பயிற்சி அமர்வுகளைத் மீண்டும் தொடங்கவுள்ளது. இருந்தபோதும் தனது வீரர்களின் உடற்தகுதி குறித்து தனக்கு அக்கறை இல்லை என்று க்ளோப் கூறினார். என் என்றால் தனது கால்பந்து வீரர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
மேலும் அரங்கங்களில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், லிவர்பூல் முதலாளி தனது அணி உலகின் சிறந்த கால்பந்து அணியாக திகலவேண்டும் என்று அவர் கூறினார்.