5 அந்நிய பிரஜைகள் கைது

கேங் வாசு கெப்போங் கும்பலைச் சேர்ந்த 5 அந்நிய பிரஜைகளை பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர் என்று ஓசிபி நிக் எஸானி தெரிவித்தார்.

இக்கும்பலைச் சேர்ந்த சிலரை போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி கெப்போங்கில் இரு இடங்களில் இந்த ஜவரையும் போலீஸார் கைது செய்தனர்.

திருடப்பட்ட பொருட்களை இந்த இரு இடங்களில் தான் விற்றோம் என ஏற்கெனவே பிடிப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அந்த இரு இடங்களில் ஐவரை கைது செய்ததோடு பலவகையான 350 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here