பிஜே ஸ்ரீசீனு உணவகத்தில் கிருமிநாசினி இயந்திர சேவை

பெட்டாலிங் ஜெயாவில் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமான ஸ்ரீசீனு உணவகத்தில் (முன்பு ஸ்ரீபாண்டி) வாடிக்கையாளர்களுக்காக கிருமி நாசினி இயந்திர சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பெயர்கள் முதலில் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் உடல் உஷ்ணம் பரிசோதிக்கப்படுகிறது. பின்னர் கிருமிநாசினி இயந்திரத்தின் மூலம் அவர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுதகிறது.

அதன் பிறகு உணவகத்தில் அவர்கள் உணவு அருந்த அனுமதிக்கப்படுவதாக ஸ்ரீசீனு உணவகத்தின் உரிமையாளர் சின்னையா தெரிவித்தார். கோலாலம்பூர் – சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள உணவகங்களில் நாங்கள் மட்டுமே இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவு வழங்கும் வேளையில் அவர்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று சின்னையா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here