நேருக்கு நேர் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர்

சிபு: மரத்தை ஏற்றிக் கொண்டு வந்த லோரியுடன் நேருக்கு நேர் ஏற்பட்ட சாலை விபத்தில் எதிர்புறத்தில் காரில் பயணித்த இரு ஆடவர்கள் கொல்லப்பட்டனர். இவ்விபத்து நேற்று (21.6.2020) இரவு 9 மணியளவில் நடைபெற்றது. பலியானவர்கள் 49 வயதான மோக் ஹாக் மிங் மற்றும் 68 வயதான யோங் கீ ஃபாங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அளித்த தகவலின் படி யோங் தான் ஓட்டுநர் என்றும், மோக் காரின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருப்பதாகவும் கூறினார். பாதிக்கப்பட்டவரை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் ஓட்டுநரின் கதவைத் திறக்க வேண்டியிருந்தது என்று அது கூறியது. அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.  இவ்விபத்தில் லோரி ஓட்டுநர் எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here