தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகம் (வயது 55) கடந்த ஜூன் 10ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, ஜாலான் பெர்சியாரான் பெர்டானா விளையாட்டு மைதானத்தில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கடத்தப்பட்டார்.
இன்று காலை 9 மணியளவில் அந்நபரின் சடலம் ரவாங், ஜாலான் ரவாங் பெஸ்தாரி ஜெயா, 27 ஆவது மைலில் ஒரு புதரில் மீட்கப்பட்டது என்று போலீஸ் தெரிவித்தது. இக்கொலை சம்பவம் சந்தேக தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.