கெவின் மொராய்ஸ் கொலை : மருத்துவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு தூக்கு

கோலாலம்பூர்: கொலை வழக்கில்  மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர். குணசேகரன் உள்ளிட்ட 6  பேருக்கு உயர் நீதிமன்றம் 2015 ல் துணை அரசு வக்கீல் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸை  கொலை செய்ததற்காக தூக்கு தண்டனை  விதித்துள்ளது.

நவம்பர் 27,2017 அன்று மொரைஸைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இந்த ஆறு பேரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.  இவ்வழக்கில்  அரசு தரப்பு வெற்றி பெற்றதாக நீதிமன்றம் கண்டறிந்ததைத் தொடர்ந்து  டாக்டர் குணசேகரன், ஆர்.தினீஷ்வரன், ஏ.கே.தினேஷ்குமார், எம். விஸ்வநாத், எஸ்.நிமலன் மற்றும் எஸ்.ரவி சந்திரன் ஆகிய ஆறு பேருக்கு இத்தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 ஜாலான் டுத்தாமாஸ் ராயா செந்தூல் மற்றும் நம்பர் 1, ஜாலான் யுஎஸ்ஜே 1/6 டி, சுபாங் ஜெயா என்ற இடத்தில் செப்டம்பர் 4,2015 அன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மொராய்ஸைக் கொலை செய்ததாக அனைவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here