அம்னோ இன்னும் சிலிம் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்யவில்லை

ஈப்போ: வரவிருக்கும்  சிலிம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து அம்னோ இன்னும் முடிவு செய்யவில்லை என்று டத்தோ சரணி முகமது (படம்) கூறுகிறார். கட்சியின் உச்ச மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) மட்டுமே நடைபெறும் என்பதால் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில அம்னோ தலைவர் கூறினார். நாங்கள் நாளை கட்சி உச்ச மன்ற கூட்ட சந்திப்பை நடத்துகிறோம் என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.  வேட்பாளர் பதிவு ஆகஸ்ட்  15 ம் தேதியாகும். டத்தோ முகமட் குஷைரி அப்துல் தாலிப்  உயிரிழந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. பெரிகாத்தான்  நேஷனல் கூட்டணியில் இருந்து எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பதாக  பேராக் மந்திரொ பெசார் டத்தோஶ்ரீ அஹ்மத் பைசல் சமீபத்தில் கூறியிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here