ஊடக சாம்ராஜ்ஜியத்திலிருந்து வெளியேறிய நிறுவனர் மகன் ஜேம்ஸ் முர்டாக்

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பியவர் ரூபர்ட் முர்டாக். ஊடகத் துறையில் இவர் கால் பதிக்காத நாடுகளே இல்லை எனும் அளவுக்கு இவரது சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்தது.

நியூஸ் கார்ப் எனும் அவரது ஊடக குழுமத்திலிருந்து, அவரது மகன் ஜேம்ஸ் முர்டாக் வெளியேறினார். தங்களது ஊடக நிறுவனம் எடுத்த சில முடிவுகளால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜேம்ஸ் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், குறிப்பாக அது எந்த முடிவு என தெரியவில்லை.

பருவநிலை மாற்றம் தொடர்பான செய்திகளை தங்கள் ஊடகங்கள் முறையாகக் கையாளவில்லை என முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார் ஜேம்ஸ்.

ரூபர்ட் முர்டாக்குகும் ஜேம்ஸுக்கும், கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் ரீதியாகக் கருத்து வேற்றுமை நிலவி வந்ததாகக் கூறுகிறார் பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் டேவிட் வில்லிஸ்.

ரூபர்ட் முர்டாக் டிரம்பை ஆதரிக்கும் போது, ஜேம்ஸ் முர்டாக் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பிரசாரத்திற்கு லட்சக்கணக்கான டாலர்கள் செலவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here