டெல்லி ரோகிணி பகுதியில் வசித்து வந்த ராஜ் என்பவர் அடிக்கடி அவரது நண்பர் ஷாபாத் பால் வீட்டுக்கு செல்வது வழக்கம். இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். ஷாபாத்துக்கு ஒரு தங்கை உள்ளார். அவருடன் ஷாபாத்தின் நண்பர் ராஜூக்கு காதல் ஏற்பட்டது.
தன்னுடைய நண்பனுக்கு தெரியாமல் ராஜ் அவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். தங்கையும் ராஜை காதலித்து வந்தார். ஒருநாள் இந்த விஷயம் ஷாபாத் பாலுக்கு தெரியவர அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். தன் தங்கையைவிட்டு விலகும்படி அவர் ராஜூவிடம் கூறினார். ஆனால் ராஜூ அதை கேட்கவில்லை.
அப்போது மட்டும் சரி என்று சொல்லிவிட்டு பிறகு காதலை தொடர்ந்துள்ளார். இதனால் கடுமையாக ஆத்திரமடைந்த ஷாபாத், ராஜூவை அடித்து கொலை செய்தார். பின்னர் உடலை டெல்லியில் ஜேஜே நகர் பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஷாபாத்தையும், அவரது உதவிய சக நண்பர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.