பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசார் டாமான் சாரா டாமாய் வட்டாரத்தில் நடத்திய அதிரடி நடவடிக்கையில் திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அந்நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கடந்த 7ஆம் தேதி காணாமல் போனது என்பது குறிப்பிடதக்கது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவ்வட்டாரத்தில் இருந்த தங்கு விடுதியில் மேலும் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 14 வயதிற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். கைது செய்யப்பட்ட 5 பேரில் மூவர் ஆண்கள். இருவர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் பெட்டாலிங் ஜெயா மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் கார் கண்ணாடியை உடைத்து பொருட்களை திருடுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தவர்களாவர்.
இவர்கள் 379A செக்ஷன் கீழ் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து யமாஹா மோட்டார் சைக்கிள் மற்றும் 80 கைப்பேசிகள், திருடுவதற்கு பயன்படுத்த தேவையான பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஓராண்டு சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.