அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வைரஸ் பரவலை தடுக்க, அதிபர் டிரம்ப் நிர்வாகம், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 1.59 லட்சம் புலம்பெயர் மக்கள், அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில், ஆதரவற்ற குழந்தைகள், 8,800 பேரும் உள்ளடங்குவர். அவர்கள், மெக்சிக்கோ எல்லைப் பகுதி வழியாக வெளியேற்றப் பட்டதாக, எல்லைக் காவல்படை துணை தலைவர் ராவுல் ஆர்டிஸ், நேற்று தெரிவித்தார்.