இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் , நான்கு பெண்களின் சடலங்கள் கோத்தா திங்கி அருகே பண்டார் பெனாவரில் உள்ள பாண்டாய் தெலுக் சி என்ற இடத்தில் மீட்கப்பட்டன
காலை 9.40 மணியளவில் வழிப்போக்கர்கள் போலீசாருக்குத்தகவல் கொடுத்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள், 31 முதல் 46 வயதுக்குட்பட்டவர்கள், சட்டவிரோதமாக கடல் வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றதாக நம்பப்படுவதாக கோத்தாதிங்கி காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெணடண்ட் ஹுசேன் ஜமோரா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அறுவரும் படகில் இருந்து இறங்கும்போது வலுவான நீரோட்டங்களால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காவல்துறையினர் மலேசிய ஆயுதப்படைகளுடன் சேர்ந்து, படகில் இருந்த இந்தோனேசியர்களைக் கைது செய்தனர், சம்பவ இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இப்படுகு இருந்தது.
இருப்பினும், படகில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
சடலங்கள் இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளதாகவும் ஹுசேன் தெரிவித்தார்.
மேலும் தப்பிப்பிழைத்தவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.