தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பரவி வரும் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் அதற்கு முன்னதாக நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இப்படம் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது மாநாடு படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாகவே இந்த படத்தின் சூட்டிங்கை தொடங்கி முடித்துவிட்டு இரண்டே மாதங்களில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்து மொத்தமாக மூன்று மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பக்கா கிராமத்து கதையாக உருவாக உள்ள இத்திரைப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.