இதுவரை 10,529 பேர் பலி

தமிழகத்தில் தினசரி 5 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 5 ஆயிரத்துக்குள் தொற்று உறுதி செய்யப்படுகிறது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 89,497 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4,389 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1,140 பேருக்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 5,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மொத்தம் 6 லட்சத்து 27 ஆயிரத்து 703 பேர் குணமடைந்துள்ளனர். 40 ஆயிரத்து 959 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நேற்று ஒரேநாளில் 57 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 20 பேரும், அரசு மருத்துவமனையில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,529 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here