கோலாலம்பூர்: இந்த நேரத்தில் நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முடிவு செய்துள்ளார்.
நாட்டின் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் அனைத்து வகையான அரசியலையும் உடனடியாக நிறுத்துமாறு அல்-சுல்தான் அப்துல்லா அனைத்து அரசியல்வாதிகளையும் நினைவுபடுத்தினார்.
தற்போதுள்ள அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் அல்-சுல்தான் அப்துல்லா கூறினார்.