அவங்களே சும்மா இருந்தாலும் இவங்க விடமாட்டாங்க போலயே

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது ‘ரெட்டை ரோஜா’ சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். இந்த கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருந்து வந்த ஷிவானி தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.

இதன் மூலம் கிடைத்த புகழை வைத்து பிக்பாஸிற்குள் நுழைந்துள்ளார். இந்த நேரத்தில் ஷிவானியின் சமூகவலைத்தள பக்கங்களை அவரது அம்மா கையாண்டு தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு மகளுக்கு ஆதரவு சேகரித்து வருகிறார்.

அந்தவையில் தற்போது மணப்பெண் அலங்காரத்தில் ஷிவானி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு இணையவாசிகள் பாலா பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் நேரா ஷிவானி வீட்டுக்கு போயி பொண்ணு கேக்கப்போறான். என உசுப்பேத்தி வருகின்றனர். அவங்களே சும்மா இருந்தாலும் இவங்க விடமாட்டாங்க போலயே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here