லடாக் பகுதியில் எல்லை ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்தியா சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வரும் வரும் நிலையில், போர் பதற்றத்தை குறைக்க இந்தியா சீனா ராணுவஅதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், லடாக் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் இருதரப்பும் படைகளை விலக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.