சூர்யா அழுதபோது நானும் அழுதேன்… பிரபல நடிகர்

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், திரை விமர்சகர்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஓடிடி வரலாற்றில் இந்த படம் வசூலில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வடிவேலு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா இந்தப் படத்தில் அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது’ என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது‌. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்… இவ்வாறு அவர் பதிவு செய்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here