ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய…

நடிகர் அருண் விஜய் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலகப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார்.

பெரிய வெற்றிக்காக காத்திருந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. அதிலிருந்து மீண்டும் அவரது சினிமா வாழ்க்கை சூடுபிடிக்க ஆரம்பித்தது. பின்னர் குற்றம் 23, தடம், மாஃபியா உள்ளிட்ட படங்கள் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்தினார் அருண் விஜய்.
தற்போது தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடிக்க அயராது உழைத்து வருகிறார். பொதுவாக அருண் விஜய் தினமும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். உடற்பயிற்சி செய்வது, தனது செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது உள்ளிட்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.
தற்போது தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய புகைப்படங்களை அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.
“இவர்களின் புன்னகையைப் பார்ப்பது மற்றும் இவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே எனது பிறந்தநாளுக்கு நான் விரும்பும் சிறந்த தொடக்கமாகும். இது என் இதயத்தை முழுமையாக்குகிறது. உங்கள் அருமையான வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அனைவருக்கும் நன்றி … எப்போதும் போல் தாழ்மையுடன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here