பெட்டாலிங் ஜெயா: ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) மதியம் நிலவரப்படி மலேசியாவில் 1,096 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 54,775 ஆகக் கொண்டுள்ளது என்று டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்) தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை 335 ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.
சிலாங்கூர் (603), சபா (311) மற்றும் பேராக் (55) ஆகிய மூன்று மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.