சாய்பாபா, அவதார புருஷராகவும் ஆன்மிக குருவாகவும் போற்றப்படுபவர்.
இந்தியாமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இன்று (நவ., 23) சாய்பாபாவின் 94 ஆவது அவதார நாள் கொண்டாடப்படுகிறது.
* 1926 நவ.,23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கப்ப ராஜு — ஈஸ்வரம்மாதம்பதியின் மகனாக சாய்பாபா அவதரித்தார். பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.
* 1940 அக்., 20: சத்யநாராயண ராஜு 14 ஆவது வயதில் தன் பெயர் ‘சாய்பாபா’ என்றும் தான் ஷிரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்றும் பக்தர்களிடம் அறிவித்தார். அந்த நாள் ‘அவதாரஅறிவிப்பு தினம்’ என கொண்டாடப்படுகிறது.