நல்ல காலம் பொறக்குது – ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப்’ –

ட்ரம்ப் முக்கியமாக நம்பியது ஜியார்ஜியா பென்சில்வேனியா மாகாண தேர்தல் முடிகள் குறித்துதான். அவை குறித்து நீதிமன்றமே ட்ரம்ப்க்கு குட்டு வைத்துவிட்டது.

‘தோல்வியை ஒத்துக்கொள்ளுங்கள்’ என்று ட்ரம்பின் மனைவில் மெலனியா ட்ரம்பும் அறிவுரை கூறியிருந்தார். இனியும் வீம்பு பிடிப்பது நல்லதல்ல என்று ட்ரம்ப் அரைமனத்துடன் முடிவுக்கு வந்திருக்கிறார்.

ட்ரம்பிடம் இருக்கும் அதிகாரங்களை ஜோ பிடனுக்கு மாற்றுவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், ட்ரம்ப் ஒப்புதல் அளிக்காததால் அவை மேற்கொண்டு நகரவில்லை. தற்போது ட்ரம்ப் அந்தப் பணிகளுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். இதன்மூலம். அந்தப் பணிகள் தீவிரமாக நடைபெறும் என்பதோடு, ட்ரம்ப் அதிபர் பதவிக்கு மல்லுக்கட்டுவதிலிருந்து விலகி விட்டார் என்பது புரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here