1981-இல் டெல்லியிலிருந்து அமிருதசரஸ் வழியாக ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டது.
இதே தேதியில் * 1960 – டொமினிக்கன் குடியரசில் மிராபெல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர். * 1973 – கிரேக்கத் தலைவர் ஜார்ஜ் பாப்படபவுலொஸ் ராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார். * 1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது. * 1987 – பிலிப்பைன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.
* 1992 – செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993-லிருந்து பிரிக்க முடிவெடுத்தது. * 2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் இடம்பெற்ற 7.0 அளவு நிலநடுக்கத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். * 2006 – சீனாவின் தென்மேற்கு , வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.