கைபர் பக்துன்க்வா தொல்பொருள் துறையின் ஃபாஸ் காலிக் இது கடவுள் விஷ்ணுவின் கோயில் என்று நம்புகிறார். இது இந்து ஷாஹி காலத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களால் கட்டப்பட்டது என்றார்.
அகழ்வாராய்ச்சியின்போது தொல்பொருள் ஆய்வாளர்கள் கோயில் இடத்திற்கு அருகில் கன்டோன்மென்ட், காவற்கோபுரங்களின் தடயங்களைக் கண்டறிந்தனர். கோவில் தளத்திற்கு அருகில் ஒரு தண்ணீர் தொட்டியை வல்லுநர்கள் கண்டுபிடித்தனர், இது இந்துக்கள் வழிபாட்டுக்கு முன்பு குளிக்க பயன்படுத்தியதாக அவர்கள் நம்பினர்.
இந்து ஷாஹிஸ் அல்லது காபூல் ஷாஹிஸ் (பொ.ச. 850-1026) என்பது காபூல் பள்ளத்தாக்கு (கிழக்கு ஆப்கானிஸ்தான்), காந்தாரா (நவீனகால பாக்கிஸ்தான்) , இன்றைய வடமேற்கு இந்தியாவை ஆண்ட ஓர் இந்து வம்சமாகும்.
ஸ்வாட் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்பொருள் தளங்கள் உள்ளன. இந்து ஷாஹி காலத்தின் தடயங்கள் இப்பகுதியில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பாஸல் கலிக் கூறினார்
ஸ்வாட் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காந்தாரா நாகரிகத்தின் முதல் கோயில் இது என்று இத்தாலிய தொல்பொருள் பணித் தலைவர் டாக்டர் லுகா கூறினார்.
வடமேற்கு பாக்கிஸ்தானின் ஸ்வாட் மாவட்டம் உண்மையில் பாக்கிஸ்தானின் முதல் 20 தளங்களில் ஒன்றாகும், இது இயற்கை அழகு, மத சுற்றுலா, கலாச்சார சுற்றுலா , தொல்பொருள் தளங்கள் போன்ற ஒவ்வொரு வகையான சுற்றுலாவையும் கொண்டுள்ளது.
பெளத்த மதத்தின் பல வழிபாட்டுத் தலங்களும் ஸ்வாட் மாவட்டத்தில் அமைந்துள்ளன.